கோர ஆபத்துக் காலத்தைப் பற்றி தொலைநோக்குடையவர், மகான்கள், ஸப்தரிஷிகள் மற்றும் தேவதைகள் கூறியுள்ள கணிப்பு!

மூன்றாவது உலகப் போரின் சகுனங்கள் தெளிவாகத் தெரிந்தும் கூட சுக வாழ்வில் மூழ்கி நான் நன்றாக உள்ளேன், என் வேலையும் நன்றாகவே உள்ளது என்ற மனோபாவம் கொண்ட பெரும்பான்மையான பாரதீய குடிமக்களுக்கு இந்த சங்கடத்தின் பரிமாணம் தெரியவில்லை. கீழே கொடுக்கப்பட்ட விவரங்கள் மூலம் இவ்விஷயத்தின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்.

 

1. தொலைநோக்குடையவர்

நானூறு வருடங்களுக்கு முன்பு நாஸ்ட்ரடாமஸ் என்ற பிரபலமான தொலைநோக்குடையவர் பிரான்ஸ் நாட்டில் இருந்தார். அவர் வருங்காலத்தைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார். அவை எல்லாமே நடந்துள்ளன. அவர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரைப் பற்றி என்ன கூறினாரோ அவை அப்படியே நடந்துள்ளன. அவர் மூன்றாவது உலகப் போரைப் பற்றியும் கூறியுள்ளார். இந்த மூன்றாவது உலகப் போர் எந்த அளவிற்கு பயங்கரமானதாக இருக்குமென்றால் முதல் இரண்டு உலகப் போர்களும் அதற்கு முன்னே குழந்தைகளின் விளையாட்டு போல் உங்களுக்குத் தோன்றும்!

 

2. மகான்

பரம் பூஜ்ய ககனகிரி மகாராஜ் அவர்கள் கூறியது, வரக்கூடிய காலம் எவ்வளவு மோசமாக இருக்குமென்றால் மகான்களுக்கும் தோன்றும் கண்களைத் திறக்காமல் மூடி இருப்பதே மேல் என்று! பல மகான்களும் இதையே கூறியுள்ளனர்.

வருடம் 2012-க்கு பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகலாம். இந்த மகாயுத்தம் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இதில் பாரதமும் பங்கேற்க வேண்டியிருக்கும். அணுகுண்டு மூலமாக நடக்கப் போகும் உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கும். கிராமம் கிராமமாக அழிந்து போகும். மூன்றாம் உலகப் போருக்குப் பின்னர் சம்பூரண பூமியை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு பல மகான்கள் தயாராக வேண்டும். இதற்கு ஸாதகர்கள் தங்களின் ஸாதனையை அதிகப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதையும் தொலைநோக்கு கொண்ட மகான்கள் கூறியுள்ளனர்.

 

3. ஸப்தரிஷி

மனிதர்கள், தெய்வங்களோடு தேசத்தையும் மறந்து விட்டனர். இந்த மனிதர்கள்தான் தாங்கள் இவ்வுலகில் நிலைத்து இருப்பது போல செல்வத்தை சேர்த்துள்ளனர். இவர்களிடம் எவ்வளவு அஹம்பாவம் உள்ளது? இயற்கை எப்பொழுது இந்த பூமியில் விளையாட ஆரம்பிக்கிறதோ அப்பொழுது எந்த ராஜா வந்து இம்மக்களைக் காப்பாற்ற முடியும்? டாக்டர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் கூட யாரையும் காப்பாற்ற முடியாது. இந்த ராஷ்ட்ரத்தை ராஜாவால் அரசாள முடியாது; குருவால் மட்டுமே முடியும். ஆபத்துக் கால தீவிரம் எந்த அளவு என்றால் இதிலிருந்து இறைவனிடம் அபார பக்தி கொண்ட பக்தன் மட்டுமே காப்பாற்றப்படுவான். (பூஜ்ய டாக்டர் உலகநாதன் அவர்கள் ஜீவநாடியிலிருந்து படித்து சொன்ன தகவல், திருவண்ணாமலை, தமிழ்நாடு. (11.12.2015)

 

4. தேவதைகள்

சுனாமி, புயல் மற்றும் பூகம்பம் ஏற்படும். உலகம் அதைத் தாங்காது. பாரதமும் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளும். பயங்கரவாதிகள் பெரும் நாசத்தை உண்டு பண்ணுவர். மனித இனம் அழியும். திருட்டும் கொள்ளையும் அதிகமாகும். பூமி தரிசு நிலமாக ஒன்றும் வளராமல் போகும். நதிகள் வறண்டு போகும். வயல்களில் தண்ணீர் தேங்கும். மின்சாரம் இருக்காது. மருந்துகள் கிடைக்காது. நோய்கள் அதிகரிக்கும். மருத்துவர்கள் கைவிடுவர். போகும்போது வரும்போது மக்கள் மரித்து விழுவர்.

ஸ்ரீ ஹாலசித்தனாததேவ (ஸ்ரீ டோநே மகாராஜ், பெல்காவ், வாசித்த இடம் : ஸனாதன் ஆஸ்ரமம், ராம்னாதி, கோவா.)

சுருக்கமாக, வரக் கூடிய ஆபத்துக் காலத்தில் மக்களுக்கும் சமூக நிலைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

 

Leave a Comment