வல்லாரைக்கீரை  பொடி

வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர்

வல்லாரைக்கீரை பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் நினைவாற்றலை கூர்மையாக்க இது பயன்படுத்தப்படுகின்றது.

1.     குணதர்மம் மற்றும் கிடைக்கும் பயன்கள்

இந்தப் பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் நினைவாற்றலை கூர்மையாக்க இது பயன்படுத்தப்படுகின்றது. நோயுற்று இருக்கும்போது இதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன; இயல்பு, இடம், பருவம் மற்றும் ஏனைய நோய்களுக்கு ஏற்றபடி சிகிச்சையில் மாற்றம் ஏற்படக் கூடும். அதனால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பயன் மருந்து உட்கொள்ளும் முறை கால அளவு
அ. உறக்கமின்மை, காக்காவலிப்பு ஏற்படுதல், மறதி, தலை வெப்பமாக இருத்தல், கோபம் ஏற்படுதல் போன்ற குறைபாடுகளுக்கு மற்றும் புத்திகூர்மை ஏற்படுவதற்கு 4 ஸ்பூன் வல்லாரைக்கீரை பொடியை 4 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க விடவும். இது குளிர்ந்த பின்பு 10 கிராம் பீம்சேன் கற்பூரத்தை பொடித்து அதில் சேர்க்கவும். தினமும் இரவு உறங்கும்போது 1−2 ஸ்பூன் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து பின் உறங்கவும். அத்துடன் ஒரு ஸ்பூன் வல்லாரைக்கீரை பொடியை இரவு உறங்கும் சமயம் அரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகவும். 3 மாதங்கள்
ஆ. உடல்சூட்டால் கஷ்டம், பித்தம் ஏற்படுதல் மற்றும் மயக்கம் ஒரு ஸ்பூன் வல்லாரைக்கீரை பொடி மற்றும் ஒரு ஸ்பூன் கல்கண்டு ஆகியவற்றை கலந்து தினமும் 2−3 முறைகள் தண்ணீருடன் பருகவும். 7 தினங்கள்
இ. சிறுநீர் கழிக்கும் பாதையில் எரிச்சல் ஏற்படுதல், மற்றும் சிறுநீர் கலங்கி இருத்தல் ஒரு நாளில் 2−3 முறைகள் ஒரு ஸ்பூன் வல்லாரைக்கீரை பொடி, ஒரு ஸ்பூன் கல்கண்டு ஆகியவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கவும். 7 தினங்கள்

2. குறிப்புகள்

3 வயதிலிருந்து 7 வயதிற்குள் உள்ளவருக்கு கால் ஸ்பூனும் 8 வயதிலிருந்து 14 வயதிற்குள் உள்ளவருக்கு அரை ஸ்பூனும் உபயோகிக்கலாம்.

3. மருந்தின் நல்ல பரிணாமம் ஏற்பட இதை தவிர்த்து விடுங்கள்!

மைதா மற்றும் கடலைமாவில் செய்த பண்டங்கள்; உப்பு, காரம் மற்றும் எண்ணெய் மிகுந்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், தயிர், பன்னீர், சீஸ், பழையது, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, சரியான அளவில் இல்லாத உணவு, வெயிலில் சுற்றுதல் மற்றும் இரவில் விழித்திருத்தல் ஆகியவை.

4.     மருந்தை உட்கொள்ளும் சமயம்
உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும்!

ஹே தெய்வமே, நான் இந்த மருந்தை உங்களின் திருவடிகளில் சமர்ப்பித்து அதை உங்களின் பிரசாதமாக உட்கொள்கிறேன். இதன் மூலம் என் நோய் குணமாகட்டும்.

–  வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (11.6.2021)

தகவல் : ஸனாதனின் ஹிந்தி நூல் ‘ஆயுர்வேதப்படி தினசரி நடந்து மருந்தில்லா ஆரோக்கிய வாழ்வை வாழுங்கள்!’

 

 

Leave a Comment