வெட்டிவேர் பொடி

வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர்

இந்தப் பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் இது பித்தம், கபத்தைப் போக்கக் கூடியது.

1.     குணதர்மம் மற்றும் கிடைக்கும் பயன்கள்

இந்தப் பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் இது பித்தம் கபத்தைப் போக்கக் கூடியது. நோயுற்று இருக்கும்போது இதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன; இயல்பு, இடம், பருவம் மற்றும் ஏனைய நோய்களுக்கு ஏற்றபடி சிகிச்சையில் மாற்றம் ஏற்படக் கூடும். அதனால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பயன் மருந்து உட்கொள்ளும் முறை கால அளவு
அ. உடல் சூடு (உடல் சூட்டை கிளப்பும் உணவை  உண்ண முடியாதிருத்தல், வாய்ப்புண் ஏற்படுதல், உடலில் எரிச்சல் ஏற்படுதல், சிறுநீர்ப் பாதையில் எரிச்சல் ஏற்படுதல், உடலில் கொப்பளம் உண்டாதல், மயக்கம், முடிக்காலில் கொப்பளம் போன்றவை) அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெட்டிவேர் பொடி ஒரு கப் பால் மற்றும் ஒரு ஸ்பூன் கல்கண்டு கலந்து அருந்தவும். இந்த மருந்தை உட்கொள்ளும் வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு எதுவும் உண்ணாதீர், அருந்தாதீர். 7 தினங்கள்
ஆ. குமட்டல், வாந்தி, பேதி மற்றும் ஆசனவாயிலில் ரத்தம் வருதல் வெட்டிவேர் பொடி, கோரைப் புல் பொடி, தனியாப் பொடி மற்றும் சோம்பு பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலக்கவும். அதில் ஒரு ஸ்பூன் மருந்தை தினமும் 3−4 முறை ஒரு கப் சூடான தண்ணீருடன் அருந்தவும். 3−4 தினங்கள்
இ. ஜுரம் ஒரு நாளில் 3−4 முறை கால் ஸ்பூன் வெட்டிவேர் பொடியை ஒரு கப் வெந்நீருடன் கலந்து குடிக்கவும். 3−4 தினங்கள்
ஈ. வெப்பமான நாட்களில் உஷ்ணத்தால் கஷ்டம் ஏற்படாமல் இருக்க ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீரில் அரை ஸ்பூன் வெட்டிவேர் பொடி கலந்து வைக்கவும். தாகம் எடுக்கும் சமயம் இதைப் பருகலாம். முதுவேனில் மற்றும் குளிர்காலம்  (அக்டோபர் ஹீட்)

2. குறிப்புகள்

3 வயதிலிருந்து 7 வயதிற்குள் உள்ளவருக்கு கால் ஸ்பூனும் 8 வயதிலிருந்து 14 வயதிற்குள் உள்ளவருக்கு அரை ஸ்பூனும் உபயோகிக்கலாம்.

3. மருந்தின் நல்ல பரிணாமம் ஏற்பட இதை தவிர்த்து விடுங்கள்!

மைதா மற்றும் கடலைமாவில் செய்த பண்டங்கள்; உப்பு, காரம் மற்றும் எண்ணெய் மிகுந்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், தயிர், பன்னீர், சீஸ், பழையது, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, சரியான அளவில் இல்லாத உணவு, வெயிலில் சுற்றுதல் மற்றும் இரவில் விழித்திருத்தல் ஆகியவை.

4.     மருந்தை உட்கொள்ளும் சமயம்
உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும்!

ஹே தெய்வமே, நான் இந்த மருந்தை உங்களின் திருவடிகளில் சமர்ப்பித்து அதை உங்களின் பிரசாதமாக உட்கொள்கிறேன். இதன் மூலம் என் நோய் குணமாகட்டும்.

–  வைத்திய மேகராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (11.6.2021)

தகவல் : ஸனாதனின் ஹிந்தி நூல் ‘ஆயுர்வேதப்படி தினசரி நடந்து மருந்தில்லா ஆரோக்கிய வாழ்வை வாழுங்கள்!’

Leave a Comment